தர்மபுரி மாவட்டத்தில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பின்னர் அம்மாவட்டத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
Tamilnadu CM Visit to Dharmapuri District : கோவிட் -19 நோய்த்தொற்றை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி வியாழக்கிழமை தர்மபுரி மாவட்டத்தில் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் தர்மபுரி மாவட்டத்திற்கான ரூ. 15.91 கோடி மதிப்புள்ள 20 திட்டங்களைத் தொடங்கி வைத்து வைத்ததோடு, மாவட்டத்தில் ரூபாய் 69.90 கோடி செலவில் பல்வேறு துறைகள் சார்ந்த 117 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மறுஆய்வுக் கூட்டத்தின்போது, கோவிட் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக கையாண்டு இருப்பதாக பாராட்டிய அவர், தர்மபுரி, மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, குறைந்த கொரானா பரவுதல் வீதத்தைக் கொண்டுள்ளதாக கூறினார்.
மதுரையின் பொருளாதார வளர்ச்சிக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி நடவடிக்கைகள்.!!
மாநில அரசு பரிந்துரைத்த அனைத்து வழிமுறைகளையும் மாவட்டம் சரியாக பின்பற்றியுள்ளது என்று கூறிய அவர், மாவட்டத்தில் இதுவரை 58 க்கும் மேற்பட்ட சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கோவில் 19 நோயாளிகளை எளிதில் கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
சமுதாய அரங்குகள், வகுப்பறைகள், மாணவர்களுக்கான விடுதிகள் மற்றும் பொது சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த முதலமைச்சர், கோவிட் -19 வழக்குகள் அண்மையில் அதிகரித்ததுக்கு பிற மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தான் காரணம் என கூறினார்.
தொற்றுநோயால் எந்தவொரு விவசாயியும் இதுவரை பாதிக்கப்படவில்லை என்றும், மாநில அரசு விவசாயிகளுடன் நட்பு ரீதியான உறவைப் பகிர்ந்து கொண்டிருப்பதால் மாவட்டம் செழிப்போடு இருந்து வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
விவசாயிகளின் நலனுக்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன என்று கூறிய முதலமைச்சர், “தர்மபுரி ஒரு விவசாய மாவட்டம். சிறப்பு உதவிகளுடன் தங்கள் உற்பத்தியை சந்தைப்படுத்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதால் எந்த விவசாயியும் பாதிக்கப்படவில்லை.
இதை தடுக்காவிட்டால் கலெக்டர்கள் மீது சிபிஐ விசாரணை: உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
விவசாயிகளுக்கு பயிர் கடன்கள், பயிர் காப்பீடு மற்றும் வறட்சி நிவாரணங்களையும் அதிமுக அரசு வழங்கியுள்ளது. விவசாயிகளுக்கு டிராக்டர், பவர் டில்லர் போன்ற விவசாய உபகரணங்கள் மானிய விலையில் வழங்கி வருகிறோம். விதைகள் மற்றும் உரங்களும் மானிய விலையில் அளிக்கிறோம், ”என்றார்.
குடிமராமத்து திட்டம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் வெற்றியைப் பெற்றதாகக் கூறிய பழனிசாமி, ஏரிகளில் மழைநீர் சேகரிக்கப்பட்ட பின்னர் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் என்றார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் அணைகள் கட்ட ரூபாய் 1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார். குழாய்த்திட்டத்தில் பல முக்கிய முன்னேற்றங்களுடன், தர்மபூரி தமிழ்நாட்டின் மிகவும் வளமான மாவட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்று முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் உறுதியளித்தார்.