9 ,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறவித்துள்ளார்.
Tamilnadu Announcement on SSLC Exam : தமிழகத்தின் தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின் சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பெருகிவரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே விவசாய கடன் தள்ளுபடி போன்ற பல்வேறு சிறப்புமிக்க அறிவிப்புகள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது மேலும் சில அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
அதாவது தமிழக அரசு ஊழியர்களின் ஒய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தி சட்ட பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஊழியர்களின் ஒய்வு பெறும் வயது தற்போது 59ஆக உள்ளது. அதுமட்டுமல்லாமல் 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக சட்ட பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதனால் பள்ளி மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கொரானா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்ததன் காரணமாக இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.