Tamilisai
Tamilisai

Tamilisai – சென்னை: எல்லையில் தற்போது பதற்றம் நீடிக்கும் இவ்வேளையில், எதிர்க்கட்சிகள் அதனை அரசியலாக்குவது தனக்கு வேதனை அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் , ‘விமானப்படை வீரர் அபிநந்தன் தாயகம் திரும்ப முயற்சி எடுத்த மத்திய அரசுக்கும், பிரார்த்தனை செய்த மக்களுக்கும் எனது நன்றி’ என்று தெரிவித்தார்.

வைகோ குறித்து பேசுகையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறிய தமிழிசை, தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதால் தான் இவ்வாறு பிரதமருக்கு வைகோ கருப்புக்கொடி காட்டுவதாக விமர்சனம் செய்தார். என்ன செய்தாலும் மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள் என்று கூறினார்.

மேலும், அதிமுக – பாஜக – பாமக கூட்டணியில் தேமுதிக இணையும் என கூறிய தமிழிசை, தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என்றும் பிரதமரின் தமிழக வருகை சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்., இவ்வாறு செய்தியாளர்களிடம் தமிழிசை கூறினார்.

இருப்பினும், இன்று குமரி வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைதளங்களில் கோ பேக் மோடி (go_back_modi)என்ற ஹேஸ்டேக் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.,