tamilisai soundararajan speech – சென்னை: மெகா கூட்டணி அமைக்க போவது பாஜகதான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவுள்ளதாக சில வட்டாரங்கள் மூலம் கூறப்படுகிறது.
இந்நிலையில் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் வெற்றி பெறவும் பல கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.,
இந்நிலையில் சென்னை எம்ஜிஆர் நகரில் நடந்த பொங்கல் விழாவில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார்,
பொங்கல் விழாவில் கலந்து கொண்ட தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில் கூறுகையில் : “இன்றைய சூழலில் மெகா கூட்டணி அமைக்கப் போவது பாஜகதான்” என்று கூறினார்.
புகையில் இருக்க கஷ்டப்படுகிறோம் என்று கூறிய மக்களுக்கு, மோடி ஆட்சியில் 5 கோடி பேருக்கு கேஸ் இணைப்பு தந்துள்ளோம்.
மேலும் மாயாவதி, அகிலேஷ் கூட்டணி அமைத்ததால் ராகுலால் பெரிய அளவில் கூட்டணி அமைக்க முடியாது என்றார் .
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் வீடியோ கான்பிரன்ஸிங்கில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தங்கள் கட்சி தமிழகத்தில் யாருடனும் கூட்டணி அமைக்காது என்று தெரிவித்தார்.
எனினும் கூட்டணிக்காக கதவுகள் திறந்தே உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
தங்களுடன் புதியவர்களும், வாஜ்பாய் காலத்தில் கூட்டணி அமைத்த பழைய நண்பர்களும் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாகவும் மோடி தெரிவித்திருந்தார்.
இதில் பழைய கூட்டணி என்று அவர் கூறியிருப்பது திமுக,அதிமுக,தேமுதிக கட்சிகளையோ என்று அனைவரும் சந்தேகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.