Tamilisai Soundararajan Speech : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, MK.Stalin, Durai Murugan

வேலூர்: வேலூர் கோட்டையை திமுக கோட்டை விட போகிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

Tamilisai Soundararajan Speech :

வேலூர் மக்களவை தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் அதன் கூட்டணி கட்சி தலைவரான ஏசி சண்முகமும், திமுக சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமியும் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக நடந்து முடிந்த 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிலும் ஒரே தொகுதியில் வெற்றி பெற்ற அவர் ஓபிஎஸ்ஸின் மகன் என்பது குறி்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது செல்வாக்கையும் டெல்லியில் நிலைநிறுத்திக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமியும் தன் சார்பில் ஒரு எம்பி இருக்க வேண்டும் என்பதால் எப்படியாவது ஏசி சண்முகத்தை ஜெயிக்க வைக்க வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார்.

மேலும் திமுகவின் கோட்டை வேலூர் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். எனவே திமுகவின் கோட்டை வேலூர் என கூறப்படுவதால் அங்கு எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் திமுக உள்ளது.

அதோடு இந்த இரு வேட்பாளர்களாலேயே கடந்த முறை தேர்தல் ரத்து செய்யப்பட்டது.தற்போது மீண்டும் அவர்களே வேட்பாளர்கள் என்பதால் தனக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தீபலட்சுமி அடித்துக் கூறுகிறார்.

இந்நிலையில் விருதுநகர் அருகே கள்ளிக்குடியில் காமராஜர் மணி மண்டபத் திறப்பு விழாவுக்கு வந்திருந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்த போது, “வேலூர் கோட்டையை திமுக கோட்டை விட போகிறது” என்று கூறி திமுகவை விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் விளம்பரத்துக்காக மட்டுமே பெரியார் தேவைப்படுகிறார். நடிகர் சூர்யா குறித்து பேசுகையில், புதிய கல்விக் கொள்கை பற்றி தெரியாமல் பேசுகிறார் நடிகர் சூர்யா என்று கூறினார் தமிழிசை சவுந்திரராஜன்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.