Tamilisai soundararajan Speech
Tamilisai soundararajan Speech

Tamilisai soundararajan Speech :

தூத்துக்குடி: அனைத்து இடங்களிலும் தாமரை மலரும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.

இதனையொட்டி, பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அவ்வபோது பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது திமுக வேட்பாளர் கனிமொழி குற்றச்சாட்டுகளை அளித்து வருகிறார்.

இருப்பினும் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, அவ்வப்போது தமிழிசை சவுந்தரராஜன் அவர்களும் பதில் அளித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.

அவ்வகையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “கனிமொழிக்கு தான், தூத்துக்குடி புதிய இடம், நான் இந்த மண்ணின் மகள்” என்று கூறியுள்ளார்.

மேலும் 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மெட்ரோ, தேஜஸ் ரயில்களை கொண்டு வந்துள்ளோம், காங் – திமுக கூட்டணி ஆட்சி காலத்தில் எந்த ரயிலை கொண்டு வந்தனர்? என்று கேள்வி எழுப்பினார்.

வெற்றிகரமான தோல்வி என்று நான் கூறியதன் அர்த்தம் வேறு: தமிழிசை விளக்கம்!!

மேலும், என்னைப் பொறுத்தவரை நான் இந்த மண்ணின் மகள்.தூத்துக்குடிக்கு நிறைய முறை சுற்றுப்பயணம் வந்துள்ளேன்.

கனிமொழிக்கு வேண்டுமென்றால் தூத்துக்குடி புதிதாக இருக்கலாம். கனிமொழி சொல்வது போல் நான் ஒன்றும் புதிதாக வரவில்லை.

திமுகவுக்கு தமிழிசை பதில் சொல்வதைவிட, இங்குள்ள மக்கள் பதில் சொல்லத் தொடங்கிவிட்டார்கள் என்று கூறினார்.

மேலும் தாமரை மலராது என்று கூறும் அனைவருக்கும் தாமரை மலரும் என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன்.

மேலும் “தாமரை ரோட்டில் மலரும், கடலில் மலரும், அனைத்து இடங்களிலும் தாமரை மலரும்… மேலும் வெற்றிக்காக எந்த தியாகத்தையும் செய்வோம்!!”என தெரிவித்தார் தமிழிசை சவுந்தரராஜன்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.