tamilisai
தெலுங்கானா ஆளுநர் பதவியில் அமர்ந்துள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கு கற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Tamilisai soundararajan in action to learn telugu in andhra – தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தராஜன் சமீபத்தில் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து கடந்த 8ம் தேதி காலை 11 மணியளவில் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார்.

அவருக்கு தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

tamilisai

இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்ட உடனேயே விரைவில் தெலுங்கு கற்றுக்கொண்டு ஆந்திர மக்களுடன் உரையாடுவேன் என தமிழிசை கூறியிருந்தார்.

கூறியது போலவே தற்போது தெலுங்கு மொழியைக் கற்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

முதல் முறையாக விளம்பரத்தில் நடித்த தல அஜித் – ஷாக்கிங் அப்டேட் .!

தெலுங்கு கற்கும் புத்தகங்களை ஆளுநர் மாளிகை அதிகாரிகள் அவருக்கு கொடுத்துள்ளனர்.

அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. எனவே கூறியது போலவே தமிழிசை விரைவில் தெலுங்கு கற்று ஆந்திர மக்களுடன் உரையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.