சன் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பப்பட உள்ள தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tamil Serials Telecast Update : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் காரணமாக இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த பொது முடக்கத்தால் சீரியல் ஷூட்டிங்கள் முற்றிலுமாக தடைப்பட்டு இருந்தது. தற்போது சின்னத்திரை சீரியல்களின் ஷூட்டிங்களை நடத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சீரியல் ஷூட்டிங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சீரியல்களின் புதிய எபிசோடுகள் வரும் ஜூலை 27-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் சன்டிவி நிறுவனமும் ஜீதமிழ் நிறுவனமும் அறிவித்துள்ளது.