Tamil Nadu Weather Report :
சென்னை: வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவ மழை கடந்த சில ஆண்டுகளாக இல்லாமல் இருந்ததால், நடப்பாண்டில் நாடெங்கும் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாகி உள்ளது. குறிப்பாக சென்னையில் தண்ணீர் பஞ்சம் மற்ற இடங்களை காட்டிலும் கூடுதலாக காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.,
முன்னதாக வறட்சியின் காரணமாக, தமிழகத்தில் செயற்கை மழை பெய்ய வைப்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தூத்துக்குடியில் பேட்டியளித்தார். மேலும் தமிழகத்தில் போதிய மழை பெய்யாததே குடிநீர் பிரச்னைக்கு காரணம் எனவும் தெரிவித்தார்.
அடுத்த 2 நாட்களுக்கு மழை: வானிலை மையம் எச்சரிக்கை!
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் இதர இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சென்னை மட்டுமின்றி பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், புதுசேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.