Tamil Nadu : தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் கைதான அதிமுகவினர் 3 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு பரிந்துரை செய்த தமிழக அரசின் கோரிக்கையை ஆளுநர் பன்வாரிலால் திருப்பி அனுப்பியுள்ளார்.
பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா முன்னிட்டு விடுதலை செய்து வருகிறது தமிழக அரசு.
இதனால் பேருந்து எரிப்பில் கைதான 3 கைதிகளையும் விடுதலை செய்யுமாறு ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஆனால் இதை ஏற்க மறுத்த ஆளுநர் 3 பேரும் மரண தண்டனை பெற்று பின் ஆயுள் கைதிகளாக இருப்பதால் அவர்களை விடுதலை செய்யுமாறு வந்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
2000- ஆம் ஆண்டில் ,”டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதால் வன்முறையில் ஈடுபட்டு,அதிமுகவினர் தருமபுரி அருகே கல்லூரி பேருந்தை எரித்தனர்.
இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய மாணவிகள் பலியாகினர்.
இந்த வழக்கில் அதிமுக பிரமுகர்கள் ஆன நெடுஞ்செழியன், ரவீந்திரன் மற்றும் முனியப்பன் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
2016- இல் மரண தண்டனை ஆயுள் தண்டனை ஆக குறைக்கப்பட்டது”.
இதை தொடர்ந்தே தமிழக அரசு முன்கூட்டியே அவர்களை விடுதலை செய்ய பரிந்துரைத்தது, ஆனால் ஆளுநர் பரிந்துரையை திருப்பி அனுப்பிவிட்டார்.