Rain Updates : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக உருவாகி இருப்பதால், இன்று முதல் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 16- ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக உருவாகியுள்ளது.
இந்த தாழ்வு மண்டலம் நகர்ந்து , இன்று தமிழக கடலோர பகுதிகளில் நெருங்கி வரும் என்பதால், டெல்டா பகுதி முதல் சென்னை வரை மழை பொழியும்.
மேலும் ‘ இந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக மாற வாய்ப்புள்ளது.
அச்சமயம் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக , சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து முகநூல் பக்கத்தில் தமிழ்நாடு வெதர் மேன் அவர்களும் பதிவிட்டுள்ளார். இதோ அவரது பதிவு நீங்களும் பாருங்கள்.