அவசர பயணங்களுக்காக தமிழக அரசு கொடுத்திருந்த அனுமதி முறைகளில் சிலவற்றை தடை செய்துள்ளது.
Tamil Nadu Government Latest Announcement : கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தற்போது இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் வீட்டிற்குள் முடங்கியுள்ளது.
திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களுக்காக சென்னையிலிருந்து வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளவர்கள் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், Dept கமிஷனர் ஆகியோரிடம் அனுமதி வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.
அஜித் படத்தால் நடக்கும் மாபெரும் மாற்றம், கொட்டோ கொட்டுனு கொட்ட போகும் வசூல்!
ஆனால் இந்த நடைமுறையால் மக்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளதால் இதில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு.
இனி தவிர்க்க முடியாத பயணங்களுக்காக வெளியூர் செல்ல விரும்புவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் அல்லது சென்னை கார்ப்பரேஷன் அலுவலகத்தில் அல்லது மாவட்ட கலெக்டரிடம் மட்டுமே அனுமதி பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இதனால் இனி தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் அனுமதி பெற்று வெளியூர்களுக்கு பயணம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.