Tamil Nadu Government Announcement About Bus Service
Tamil Nadu Government Announcement About Bus Service

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து குறித்து உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி.

Tamil Nadu Government Announcement About Bus Service : தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக பொது போக்குவரத்து முற்றிலுமாக முடக்கி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மட்டுமே இருந்து இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பேருந்துகளின் இயக்கமும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தற்போது வரும் செப்டம்பர் ஏழாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங் களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாமல் தவித்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செப்டம்பர் ஏழாம் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.