Tamil Nadu Creates New Record in Corona Test
Tamil Nadu Creates New Record in Corona Test

கொரானா பரிசோதனையில் தமிழக அரசு இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Tamil Nadu Creates New Record in Corona Test : இந்தியாவில் கொரானா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 லட்சமாக அதிகரித்துள்ளது.

பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் பரிசோதனைகளை அதிகரித்து இருப்பதால் தான்.

இன்று மட்டும் 81,588 பேருக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும்.

இந்தியாவிலேயே முதலிடம்.. கொரானா பரிசோதனை மற்றும் சிகிச்சையில் தொடர் சாதனை படைக்கும் தமிழகம்!

தமிழகத்தில் மட்டும் இதுவரை 49,62,357 பேருக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வரும் தரமான சிகிச்சைகளால் இதுவரை 3,92,507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 6,334 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிக அளவில் பரிசோதனைகளை மேற்கொள்கிறது. அதே போல் விரைவில் குணமடந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது.

இதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தான் காரணம் என பலரும் பாராட்டி வருகின்றனர்.