Tamil Nadu CM Wishes to Paramakudi MLA
Tamil Nadu CM Wishes to Paramakudi MLA

தமிழகத்தின் முதல் ஆளாக பிளாஸ்மா தானம் செய்த அதிமுக எம்எல்ஏ-வை டுவீட் போட்டு பாராட்டியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

Tamil Nadu CM Wishes to Paramakudi MLA : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் இதுவரை கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரானா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம், அதனால் அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் வராது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கொரானாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த பரமக்குடி அதிமுக எம்எல்ஏ திரு சதன் பிரபாகரன் பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.

இவன் தான் என் பையன்.. முதல் முறையாக தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் டானி!

மேலும் மீண்டும் இன்னொரு முறை பிளாஸ்மா தானம் செய்வேன் எனவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தின் முதல் பிளாஸ்மா வங்கியில் முதல் நபராக முன் வந்து பிளாஸ்மா தானம் செய்ததுடன் மீண்டும் தானம் செய்யவுள்ளதாகவும் கூறிய பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.சதன்பிராபகர் அவர்களுக்கு மக்கள் சார்பாகவும் எனது சார்பிலும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.