இனி அஜித், விஜய் படங்களின் வசூல் பட்டய கிளப்பும் என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான காரணம் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தான்.
Tamil Nadu Announcement :
தமிழ் சினிமாவில் வெளியாகும் அஜித், விஜய், சூர்யா, ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பும் வரவேற்பும் உண்டு. வசூலிலும் இவர்களின் படங்கள் எப்போதும் டாப் தான்.
பத்ரி படத்திற்கு மீண்டும் இணையும் கூட்டணி – தளபதியின் அடுத்தப் படம் குறித்த அப்டேட்.!
இந்நிலையில் தமிழக அரசு இனி 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம் என அறிக்கை வெளியிட்டு இருந்ததை அடுத்து தியேட்டர்களும் 24 மணி நேரமும் இயங்கலாம் என அறிவித்தது.
இதனால் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் நாங்க சும்மாவே தெறிக்க விடுவோம். இப்போ 24 மணி நேரமும் தியேட்டர்கள் இயங்கலாம் என்றால் சும்மாவா விடுவோம் என கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.