கொரானா வைரஸ் உச்சம் பெற்று வரும் நிலையில் மாஸ்டர் அண்ணாத்த போன்ற படங்களின் ரிலீஸ் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.
Tamil Movie Release Postponed : சீனாவில் கடந்த வருடம் உருவான கொரானா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது.
இதுவரை பல நாடுகள் இந்த வைரஸின் கோர தாண்டவத்திற்கு உள்ளாகி தற்போது தான் அதிலிருந்து மீண்டு வருகிறது.
இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது ஒரு புறம் இருந்தாலும் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகளையும் தொடர்ந்து அறிவித்து வருகிறது.
மேலும் மூடப்பட்ட தியேட்டர்களும் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் போரிஹீட் விட்டு ஒரு சீட்டில் தான் பார்வையாளர்கள் அமர வேண்டும் என்பதால் கூட்டம் வருவது கஷ்டமே என தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரானா வைரஸ் உச்சம் தொடும். சென்னையில் மட்டுமே சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். ஒட்டுமொத்த தமிழகத்திலும் குறைந்தது ஒன்றரை லட்சம் பேராவது பாதிப்புக்கு உள்ளாவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
இதன் காரணமாக மாஸ்டர் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகும் என கூறப்பட்டு வருகிறது.
தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டு வரும் மாஸ்டர் பொங்கலுக்கு தள்ளிப் போகலாம். பொங்கல் ரிலீஸ் என அறிவித்துள்ள அண்ணாத்த திரைப்படம் அடுத்த வருட ஏப்ரல் மாத ரிலீசுக்கு தள்ளிப்போகும் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்தாலும் வெறும் 60 பேர் மட்டுமே வைத்து படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்பது சிறிய படங்களுக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம்.
அஜித், விஜய் ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு இது நிச்சயம் சரிப்பட்டு வராது.
இதனால் கொரானா இல்லாத நிலை உருவானால் மட்டும் தான் இவர்களின் படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கும் படங்களும் ரிலீஸ் ஆகும் எனவும் கூறி வருகின்றனர்.