Taapsee Complaint on EB Bill
Taapsee Complaint on EB Bill

எனக்கு கரண்ட் பில் 36,000 வந்திருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை டாப்ஸி.

Taapsee Complaint on EB Bill : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் அதி தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அசுர வேகத்தில் எகிறுகிறது.

இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகைகள், நடிகர்கள் பலரும் தங்களுக்கு கரண்ட் பில் அதிகமாக வந்திருப்பதாக மின்சாரத் துறை மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.

முதலில் நடிகர் பிரசன்னா இதுகுறித்து குற்றம் சாட்டியிருந்தார். அவரைத் தொடர்ந்து நடிகை கார்த்திகா தனக்கு ஒரு லட்சம் பில் வந்திருப்பதாக கூறியிருந்தார்.

முன்னழகையும் தொடையையும் காட்டி ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ

இந்த நிலையில் தற்போது நடிகை டாப்ஸி தனக்கு 36 ஆயிரம் கரண்ட் பில் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல் ஆளே இல்லாத வீட்டிற்கு 57 ஆயிரம் கரண்ட் பில் வந்து இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

எதன் அடிப்படையில் பில் தொகையை கணக்கிடுகிறார்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.