T-20 Matches : இன்று தொடங்குகிறது இந்தியா மற்றும் ஆஸ்., அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி-20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கு ஏற்க உள்ளது.
விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி வார்னர், ஸ்டீவ் இல்லாத ஆஸ்., அணியுடன் மோதுகின்றது.
ஆஸ்., அணிக்கு வார்னர், ஸ்டீவ் இல்லாமல் இருப்பது சற்று பின்னடைவு என்றாலும் நல்ல உயரம் கொண்ட பந்து வீச்சாளர்களை கொண்டு உள்ளது.
மேலும் ஐசிசி தரவரிசையில் ஆரோன் பின்ச் பேட்டிங்கில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இந்திய அணியும் நல்ல வலுவான அணியாகவே இருக்கின்றது. ஆல்-ரவுண்டர் பாண்டியா இல்லாதது இந்திய அணிக்கு சற்று பின்னடைவு என்றாலும் நமது இந்திய அணியில் மற்ற சிறந்த பந்து வீச்சாளர்கள் அந்த வெற்றிடத்தை சரி செய்வார்கள் என்றே நம்பப்படுகின்றது.
இந்திய அணியின் கோலி, ரோகித்,தவான், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ராகுல், க்ருணால் பாண்டியா ஆகியோர் உள்ளனர்.
விராட் கோலியின் கருத்து :
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நாங்கள் செய்த தவறுகளை ஆஸி., உடனான போட்டிகளில் செய்ய மாட்டோம். மற்றும் முன்பு நடந்த போட்டிகளில் ஏற்பட்ட அவபெயரை மாற்ற முயற்சிப்போம் என்றும் கூறினார்.
மேலும், முன்னணி வீரர்கள் இல்லாத நிலையிலும் அவர்கள் நன்றாக செயல்படுவார்கள். இருந்தும் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம் என்றும் கூறினார்.
மைதானத்தில் எதிரணிவீரர்கள் வெறுப்பேறும் வகையில் செயல்படுவது குறித்து கோலி பதில் அளித்தார்.
அதாவது நாங்கள் எதையும் ஆரம்பிக்க மாட்டோம். ஆனால் எதாவது நடந்தால் நாங்கள் அதை நின்று எதிர்கொள்வோம். எதிரணி ஆக்ரோஷமாக செயல்பட்டால் நாங்களும் ஆக்ரோஷத்தை காண்பிப்போம்.