T20 India
T20 India

T20 India – அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் தேர்வு செய்து தவறு செய்த இந்திய அணி இன்று பந்து வீச்சில் பதிலடிக்கொடுக்கும் முனைப்பில் உள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது. நேற்றைய போட்டியில் டாஸ் வெற்று பேட்டிங் சேர்வு செய்து முதலில் களம் இறங்கிய இந்திய அணி 250 ரன்கள் எடுத்து இருந்தது.

ஷிமி மட்டுமே 6 ரன்களில் களத்தில் இருந்தார். அவரும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில், தனது முதல் இன்னிக்ஸை தொடங்கிய ஆஸ்., அணியின் தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் இஹாந்த் சர்மாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ஹாரிஸ்-கவாஜா ஜோடி நிதானத்தை கடைபித்தது. அதனால், ஆஸ்., அணியின் ஸ்கோர் 45-ஆக உயர்ந்தது.

அடுத்து அஸ்வின் ஓவரில் ஹாரிஸ் ஆட்டமிழந்தார். மற்றும் அப்போது ஹாரிஸ் 26 ரன்கள் எடுத்து இருந்தார். அடுத்ததாக மீண்டும் அஸ்வின் சுழலில் ஷான் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அப்பொழுது ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 59-ஆக இருந்தது. தனது 3-வது விக்கெட்டாக அஸ்வின் கவாஜாவின் விக்கெட்டை எடுத்தார்.

டீ இடைவெளிக்கு முன்பு வரை ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பீற்க்கு 96 ரன்களில் இருந்தது.

இடைவேளைக்கு பிறகு பும்ரா மற்றும் ஷர்மா இருவரும் மேலும் விக்கெட் எடுக்க ஆஸ்திரேலியா அணி 150 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து களத்தில் உள்ளது.