T20 India vs Australia – ஆஸ்., சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்தியா அணி டி-20, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
டி-20 போட்டியில் 1-1 என்று சமன் செய்த இந்திய அணி இன்று காலை தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ், க்கு எதிராக தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. முதலில் களமிறங்கியது கே.எல்.ராகுல் மற்றும் முரளி விஜய். கே.எல்.ராகுல் 2 ரன்களில் வெளியேறினார்.
மேலும், முரளி விஜய் 11 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கியது இந்திய அணி கேப்டன் விராட் கோலி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். இருந்தும் அந்த எதிர்பார்பை விராட் பொய்யாகினார்.
மூன்றாவதாக களமிறங்கியது விராட், 3 ரன்களில் கேட்ச் அவுட்டாகி வெளியேறினார். இதுவரை இந்திய அணி ஆஸ், தொடரில் வெற்றி பெற்றது இல்லை.
இந்த முறை வெற்றி பெரும் என்று நம்பியிருந்த ரசிகர்களுக்கு விராட்டின் வெளியேற்றம் பெரிய ஏமாற்றமாக இருந்தது.
மேலும் அடுத்ததாக களமிறங்கியது புஜாரா, இதுவரை அவுடாகமல் 42 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதுவரை விளையாடிய ரகானே 13 ரன்கள், ரோகித் 37 ரன்கள், பண்ட் 25 ரன்கள் எடுத்து வெளியேறி உள்ளனர்.
அஸ்வின் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார். தற்போது இந்திய அணி 140 ரன்களுடன் 6 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.