மாநாடு படம் ரிலீசுக்கு பிறகு மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது.
T Rajendhar Complaint on Suresh Kamatchi : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கிய சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
படம் பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி கடந்த நவம்பர் 25 ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. படம் ரிலீசுக்கு முதல் நாள் வரை படத்தின் சாட்டிலைட் உரிமையை விற்க படாததால் ஐந்து கோடிக்கும் குறைவாக விற்பனையானால் இந்தத் தொகைக்கு தான் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாக படத்தின் பைனான்சியருக்கும் எங்களுக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
அதன் பின்னர் திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் எங்களுக்கு தெரியாமல் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு விற்றுள்ளனர் என வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்சியர் உத்தம்சந்த் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் மீண்டும் பிரச்சனையா என சிம்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.