எத்தனை நாளைக்கு எங்களை தீவிரவாதியாகவே காட்டுவீங்க என சுட்டு பிடிக்க உத்தரவு இயக்குனருக்கு ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
Suttu Pidikka Utharavu Issue : தமிழ் சினிமாவில் மிஸ்கின், விக்ராந்த், சுசீந்திரன், அதுல்யா மற்றும் பலர் இணைந்து நடித்திருந்த படம் சுட்டு பிடிக்க உத்தரவு.
ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி இருந்த இந்த திரைப்படம் கடந்த ஞாயிறு அன்று ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தடுக்கும் விதமாக சிலர் படக்குழுவிற்கு எதிராக களமிறங்கியுள்ளார்.
இந்த படத்தில் கோயம்புத்தூர் முஸ்லீம்களை தீவிரவாதிகளை போல காட்டியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்ததாக ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் கருத்து தெரிவித்து டீவீட்டியுள்ளார்.
சுட்டு பிடிக்க உத்தரவு விமர்சனம்.!
மேலும் எத்தனை வருஷத்துக்கு தான் எங்களை தீவிரவாதிகளாக காட்டுவீங்க எனவும் அவர் மிரட்டலுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
படத்தை பற்றி பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில் இப்படியான விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.