Sushant Singh Postmortem Report
Sushant Singh Postmortem Report

சுஷாந்த் சிங்கின் பிரேத பரிசோதனையின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதேசமயம் வலிமை பட தயாரிப்பாளரின் மகன் அர்ஜுன் கபூர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Sushant Singh Postmortem Report : பாலிவுட் சினிமாவில் இந்திய கிரிக்கெட் வீரரான எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஹீரோவாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் சுஷாந்த் சிங்.

சின்னத்திரை சீரியலில் நடித்து வந்த இவருக்கு இப்படம் வெள்ளித்திரையில் மிகப்பெரிய இடத்தை பெற்றுக் கொண்டது. ஆனால் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் திரையுலகில் வந்ததால் வாரிசு நடிகர்களின் மாபியா இவரை விடாது துரத்தியது.

சுஷாந்த் சிங்கிற்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தட்டி பறித்தது. இதனால் ஆறு மாதத்தில் ஏழு படங்களை இழந்தார் சுஷாந்த்.

மேலும் பாலிவுட்டின் டாப் பிரபலங்களான சல்மான் கான், அனில் கபூர், கரன் ஜோகர் போன்றவர்கள் கொடுத்த அழுத்தத்தால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

போனி கபூரின் அடுத்த தமிழ் இயக்குனர், ஹீரோ இவர் தான் – அப்போ அஜித் இல்லையா? வெளியான பரபரப்பு தகவல்.!

மேலும் இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில் சுஷாந்த் தூக்கில் தொங்கிய போது மூச்சுத் திணறி தான் உயிரிழந்தார். வெளிப்படுத்துதல் எதுவும் இல்லை, அவர் போராடி உயிர் விட்ட அதற்கான எந்த அறிகுறியும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க சுஷாந்த் இறுதியாக நடிக்க வேண்டிய இருந்த படத்தில் திடீரென அவர் நீக்கப்பட்டு அர்ஜுன் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான காரணம் என்ன? அவர் வாரிசு நடிகர் என்பதால் இந்த வாய்ப்பு அவரது கைக்கு சென்றதா? அர்ஜுன் கபூர் உடல் எடையை குறைத்த தைத் தவிர இதுவரை வேறென்ன செய்திருக்கிறார் என நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதனால் அர்ஜூன் கபூரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.