surjith

சமீபத்தில் திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் மீட்க முடியாமல் மரணமடைந்த சம்பவம் நாடெங்கும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், சுஜித்தின் உடலை மீட்டது எப்படி? ஏன் முகத்தை பெற்றோரிடம் கூட காட்டவில்லை?.. சுஜித் இறந்துவிட்டான் என்பதை ஏன் நள்ளிரவில் அறிவித்தனர்? உண்மையிலேயே அவர் எப்போது இறந்தான்? என பல்வேறு கேள்விகளை பலரும் சமுக வலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக முதல்வர் பதிலளிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் கோரிக்கை வைத்துள்ளர்.

இந்நிலையில், சுஜித் விழுந்து மரணமடைந்த ஆழ்துளை கிணற்றின் அருகே அவனின் பெற்றோர் சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி பலரின் மனதையும் கலங்க வைத்துள்ளது.