காக்க காக்க சுற்றுச்சூழலை காக்க என ஒரே வீட்டில் ட்விட்டரை அதிர வைத்துள்ளார் சூர்யா.
Suriya Voice on EIA2020 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப் போற்று போன்ற படம் உருவாகியுள்ளது. ரசிகர்கள் அனைவரும் படத்திற்காகத்தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நடிகராக மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த விஷயங்களுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சூர்யா தற்போது EIA2020 குறித்து குரல் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே இந்த விஷயம் குறித்து நடிகர் கார்த்தி கருத்து தெரிவித்திருந்த நிலையில் சூர்யா தன்னுடைய கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில் பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்..
EIA2020 என பதிவிட்டுள்ளார்.
சூர்யாவின் இந்த பதிவிற்கு ஆதரவு குவிந்து வருகின்றன. ரசிகர்களும் இந்த பதிவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
இதுகுறித்து ரசிகர்களின் கருத்துக்கள்