நிவாரண பணியில் சூர்யா ரசிகர்கள் செயலைக்கண்டு சூர்யா ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
Suriya Voice Note About His Fans Service : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா நடிகராக மட்டுமல்லாமல் 2டி என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலம் தரமான படங்களையும் அதேசமயம் அகரம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையின் மூலம் ஏழை எளிய மக்களின் கல்விக்கு உதவி வருகிறார் .
தற்போது கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தப் இந்தியாவில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த வைரஸ் அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியாவில் உச்சத்தை அடையும் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதன் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஏழை எளிய மக்களை பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இவர்களுக்காக பலரும் கைகொடுத்து நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
சூர்யாவின் ரசிகர்களும் வறுமையில் வாடும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து சூர்யா ஆடியோ நோட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நிவாரண உதவிகளை செய்து வரும் அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி. உண்மையில் வறுமையில் வாடும் மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடைந்தனவா என்பதை ஓரிரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வீடியோவை சூர்யா ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
@Suriya_offl anna's Heartfelt Voice Note For His Anbaana Fans Relief Works 🥺❤️ Thalaivan da !!#SFCWelfareWorks #SooraraiPottru pic.twitter.com/qixA6jz5v5
— Rolex (@mahendra_suriya) June 8, 2020