காப்பானில் முதலில் நடிக்க இருந்தது தான் இல்லை, ஒரு டாப் ஹீரோ தான் என சூர்யா பேசியுள்ளார்.
Suriya Speech About Kaappaan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது காப்பான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 20-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
கே. வி ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் சாயீஷா நாயகியாக நடிக்க ஆர்யா, மோகன் லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
அதில் சூர்யா கலந்து கொண்டு பேசிய போது சுபஸ்ரீ மரணத்திற்கு வருத்தப்பட்டு பேசினார்.
மாஸாக.. கெத்தா அதிரடி காட்டும் சூர்யாவின் காப்பான் 2 ட்ரைலர் இதோ.!
மேலும் தனக்கு ரசிகர்கள் பேனர் வைத்து கொண்டாட வேண்டாம். அதற்கு பதிலாக பள்ளிகளுக்கு உதவுங்கள், ரத்த தானம் செய்யுங்கள் எனவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும் காப்பான் கதை 2012-லேயே உருவானது. முதலில் இதில் ஒரு டாப் ஹீரோ தான் நடிக்க இருந்தார். அவர் நிராகரிக்கவே இந்த படம் எனக்கு வந்தது என கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இதுவரை என்னுடைய படங்களிலேயே அயன் தான் பெஸ்ட்டான படம் என கூறுகிறார்கள்.
மாற்றானும் என் கேரியரில் நல்ல படம். இதுவும் அப்படியே அமையும். கே. வி ஆனந்த் சார் என்னை வேறொரு கோணத்தில் பார்க்கிறார் என பேசியுள்ளார்.
“எனக்கு இதெல்லாம் தேவையே இல்ல” – #Suriya ‘s Emotional Speech on #Kaappaan Press Meet..! https://t.co/OiFaI14KXc#KaappaanFromSep20 #Kaappan @SuriyaFansTeam @SuriyaFansClub @Suriya_offl @arya_offl #Arya #KVAnand #sayyeshaa #Mohanlal @sayyeshaa @SuriyaFansWorld @SevenSri
— Kalakkal Cinema (@kalakkalcinema) September 14, 2019