நடிகர் சூர்யா விக்ரம் 3 படத்திற்காக வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது விக்ரம் திரைப்படம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதி பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர் சூர்யா 10 நிமிடங்கள் மட்டுமே இடம்பெற்ற ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

விக்ரம் படத்தின் மூன்றாம் பாதத்தில் சூர்யாவை வைத்து திரைப்படம் உருவாக இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார். அதாவது விக்ரம் படத்தின் அடுத்த பாகம் உருவாவது உறுதி என தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சூர்யா இந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்ததாக கூறிவந்த நிலையில் கமல்ஹாசன் அவர்களின் நன்றி கூறி வெளியிட்டுள்ள வீடியோவில் அதனை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.

அதாவது தன் மீது கொண்ட அன்பால் மட்டுமே சூர்யா இந்தப் படத்தில் நடித்தார் என கூறியுள்ளார். இதன் காரணமாக விக்ரம் 3 படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இதுவரை அவர் பங்கு அளவிற்கு மிக பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது நடிகர் சூர்யா ஒரு படத்திற்கு ரூபாய் 35 கோடி முதல் 45 கோடி வரை வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.