மங்காத்தா படத்தின் வெற்றி குறித்து நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூர்யா ஓபனாக பேசியுள்ளார்.
Suriya Review on Mankatha : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. நடிகர் சிவகுமாரின் மகன் என்றாலும் தன்னுடைய கடுமையான உழைப்பால் தான் இன்று உயர்ந்து ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
நடிப்பு மட்டுமல்லாமல் பட தயாரிப்பு மற்றும் அகரம் பவுண்டேஷன் மூலமாக பல ஏழைக் குழந்தைகளின் கல்வித் தேவைகளை நிறைவேற்றி வருகிறார்.
மேலும் இவர் தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். விஜயும் சூர்யாவும் இணைந்து நடித்திருந்த இந்தப் படத்தின் ஆரம்பத்தில் அஜித் தான் நடித்து வந்தார்.
இரண்டு மூன்று நாட்கள் ஷூட்டிங் முடிந்தது இந்த நிலையில் படக்குழுவினருடன் ஏற்பட்ட தகராறில் அஜித் இந்த படத்திலிருந்து விலகிக் கொண்டார். அதன் பிறகுதான் இந்த வாய்ப்பு சூர்யா சினிமாவில் அறிமுகமாக சாத்தியமானது.
இதுகுறித்து நடிகர் சூர்யாவே நிலைகொண்டு அன்று அஜித் சார் இந்த வாய்ப்பை விட்டுக் கொடுக்கவில்லை என்றால் நான் இன்று சினிமாவில் இருந்து இருப்பேன் என எனக்கு தெரியாது என பேசினார்.
அதுமட்டுமல்லாமல் டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அஜித் சாரின் புகைப்படத்தை காட்டி அவரை பற்றி பேச கூறினார்.
அப்போது நடிகர் சூர்யா தல அஜித்தின் மங்காத்தா படம் பற்றி பேசினார். அஜித் எப்படி அந்த வேடத்தை ஏற்று நடித்தார் என்று தெரியவில்லை அவ்வளவு அற்புதமாக நடித்திருந்தார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது மிகப்பெரிய கடினமான விஷயம். ஆனால் இந்த படம் அதை அழகாக செய்திருந்தது. அஜித் வெங்கட் பிரபு கூட்டணி சிறப்பாக கை கொடுத்து இருந்தது.
வாலி படத்திலேயே அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடித்து இருந்தாலும் இந்த படத்தில் இன்னும் மிரட்டலாக நடித்திருந்தார். அது ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து இருந்தது, அதுதான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என கூறியுள்ளார்.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.