நடிகர் கார்த்தி இயக்குனர் ஆவார் எனவும் ஜோதிகாவுடன் நடிப்பது எப்போது என்ற கேள்விக்கு சூர்யா பதில் அளித்துள்ளார்.

Suriya Interview About Jai Bhim : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நாளை அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் டீசர் டிரைலர் ஆகியவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

உலக குத்துச்சண்டை : இந்திய வீரர்கள் முன்னேற்றம்..

இந்த நிலையில் நடிகர் சூர்யா அளித்துள்ள பேட்டி ஒன்றில் எப்போது இயக்குனராகுவீங்க என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சூர்யா நான் இயக்குனராவேனா என தெரியாது. நான் நடிப்பிலும் தயாரிப்பிலும் சந்தோஷமாக உள்ளேன்.

கார்த்தி தன் இயக்குனராக வேண்டும் கதை எழுதுகிறேன் இதை ஆய்வு செய்கிறேன் என எதையாவது செய்துகொண்டே இருப்பார். கார்த்தி ஒரு நாள் நிச்சயம் இயக்குனர் ஆவார். ஜோதிகா கூட நிறைய ஐடியா வைத்துக் கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார்.

செம Jolly ஆக கலாய்த்த Karu Pazhaniappan – மேடையில் விழுந்து விழுந்து சிரித்த MP.Kanimozhi

அதன் பிறகு ஜோவுடன் சேர்ந்து நடிப்பது எப்போது என கேட்கப்பட்டது. அதற்கு நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் இருவரும் இணைந்து நடிப்போம். இந்த வயதுக்கும் தோற்றத்திற்கும் ஏற்ற கதை அமைய வேண்டும். ஏற்கனவே இருவரும் இணைந்து எல்லாவிதமான பரிமாணங்களிலும் படம் நடித்து விட்டேன் என கூறியுள்ளார்.