Suriya helped Selvaraghavan :
நீண்ட நாளாக ஒரு பிரேக்காக காத்திருக்கும் செல்வராகவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதில் சூர்யா உறுதியாக இருந்துள்ளார்
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
குறிப்பாக பலரும் இப்படம் புரியவில்லை என்றும் இதன் கதாப்பாத்திரங்களில் தெளிவு இல்லை என்றும் கூறியிருந்தனர்.
மிஸ்டர் லோக்கல் தோல்வி என்றால் கூட தளபதிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!
அந்த வகையில் சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் இப்படம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது இதில் என்ன ஆச்சரியம் என்றால் என் ஜி கே படத்தின் ரிசல்டை ரிலீசுக்கு முன்பே சூர்யா கணித்திருக்கிறாராம்.
எனினும் நீண்ட நாளாக ஒரு பிரேக்காக காத்திருக்கும் செல்வராகவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதில் சூர்யா உறுதியாக இருந்துள்ளார்.
அதனால் தான் இப்படத்தின் திரைக்கதை கொஞ்சம் சொதப்பல் என்பதை தெரிந்தும் செல்வராகவனுக்காக இப்படத்தில் உயிரைக் கொடுத்து நடித்துள்ளார் சூர்யா.
அதற்கு பலனாக அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது. எனினும் செல்வா இன்னும் இப்படத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்பதே அனைவரது எண்ணமாக உள்ளது.