சூர்யா, கௌதம் மேனனுக்கு இடையேயான பிரச்சனைக்கு காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.
Suriya & GVM Next Movie : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவர் நடிகர் சூர்யாவை வைத்து காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களை இயக்கி இருந்தார்.
இந்த படங்களை தொடர்ந்து சூர்யா கௌதம் மேனனுக்கும் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சினையால் இன்று வரை இணையாமல் இருந்து வருகின்றனர்.
மேலும் தற்போது இவர்களுக்கிடையே சமரசம் ஏற்பட்டு அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சூர்யாவுடனான பிரச்சனைக்கு காரணம் என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது தற்போது விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படத்தில் முதன்முதலாக சூர்யா தான் நடிக்க இருந்தார். சூர்யாவிடம் பாதி கதையை மட்டுமே கூறிய கௌதம் மேனன் இந்த படத்தை இயக்குவதற்கு தயாராகியுள்ளார்.
அதற்காக ஷூட்டிங் வேலைகளும் நடந்து உள்ளது. ஆனால் சூர்யா முழு கதையை கேட்ட பிறகு தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார். உங்களுக்கு ஹிட் கொடுத்த என்னை நம்ப மாட்டீர்களா என கவுதம் மேனன் பேச இருவருக்கும் இடையே சிறு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே இவர்கள் இவ்வளவு நாள் இணையாமல் இருந்து வந்துள்ளனர். மேலும் கௌதம் மேனன் தற்போது கமல், காதம்பரி என்ற இசைக் கலைஞர்களின் காதல் கதையை படமாக்க உள்ளார்.
இந்த கதையை அவர் சூர்யாவை மனதில் வைத்தே உருவாக்கியுள்ளாராம். இந்த கதாபாத்திரங்களின் பெயர் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா தற்போது சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படம் ஊரடங்கு முடிந்த பிறகு ரிலீசாக உள்ளது. மேலும் ஹரி இயக்கத்தில் அருவா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.