சூர்யாவை வைத்து இயக்க போகும் கதை என்ன என்பது பற்றி கெளதம் வாசுதேவ் மேனன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் தற்போது சூரரை போற்று திரைப்படம் உருவாகி வருகிறது, இந்த படத்தை அடுத்து சிறுத்தை சிவா மற்றும் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படங்களை தொடர்ந்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க இருப்தாக கூறப்படுகிறது. ஆனால் இது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது கெளதம் மேனன் தன்னுடைய அடுத்த படத்தின் கதை கமல், காதம்பரியின் காதல் கதை என கூறியுள்ளார்.
கமல், காதம்பரி ஆகியோர் பாடகர்கள். இவர்கள் காதலில் இணைந்தார்களா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை