வீடு இல்லாமல் தவித்து வருபவர்களுக்கு 80 நாளாக சைலன்டாக உதவியுள்ளனர் சூர்யா ரசிகர்கள்.
Suriya Fans Help to Roadside People : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த வைரஸ் தாக்கம் காரணமாக பல குடும்பங்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். வீடுகள் இல்லாமல் சென்னை போன்ற பெருநகரங்களில் பலர் சாலை ஓரங்களில் தவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 80 நாட்களாக சூர்யா ரசிகர்கள் மதிய உணவு, இரவு உணவு, வாட்டர் பாட்டில் ஆகியவற்றை வழங்கி வந்துள்ளனர்.
80 நாட்களாக எந்தவித விளம்பரமும் இல்லாமல் சைலன்டாக வடசென்னை சூர்யா ரசிகர் மன்ற உறுப்பினர்கள் செய்து வந்த இந்த உதவி பலரையும் பாராட்ட வைத்துள்ளது.
இதன் மூலம் சூர்யாவிற்கு அவரது ரசிகர்கள் பெருமை சேர்த்துள்ளனர்.
80 நாட்களில் கிட்டத்தட்ட 20,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உதவி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.