Suriya Fans Help in Lockdown

கொரானா ஊரடங்கு காரணமாக சூர்யா ரசிகர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

Suriya Fans Help in Lockdown : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் கோர தாண்டவம் ஆடி வருகிறது.

இந்த வைரஸ் தொற்றால் தமிழகத்திலும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சாலையோரமாக வாழும் மக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். உணவில்லாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் களத்தில் இறங்கி சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். ஊரடங்கு முடியும் வரை அவர்களுக்கு உணவு வழங்க முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது 48 நாட்கள் சாலையோர மக்களுக்கு உணவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.