வனிதாவால் சூர்யா தேவி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Suriya Devi Arrested by Chennai Police : பிரபல நடிகையான வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் 27ஆம் தேதி மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பால் என்பவருக்கும் வனிதாவுக்கும் இரண்டு மகள்களின் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது.
இவர்களின் திருமணம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறி இருந்தது. சூர்யா தேவி என்பவர் வனிதாவை தரக்குறைவாக பேசி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இதனால் வனிதா அவரது லாயர் ஸ்ரீதர் உடன் சென்று போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இருப்பினும் சூர்யா தேவி தொடர்ந்து அவரை தாக்கி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை சென்னையில் சூர்யா தேவி வடபழனி காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், போன்ற பிரிவுகளின் கீழ் வடபழனி மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.
வனிதாவை கேவலமாக பேசினால் சூர்யா தேதி கைது செய்யப்பட்டார் என்றால் லட்சுமி ராமகிருஷ்ணனை ஆபாசமாக திட்டிய வனிதா ஏன் கைது செய்யப்படவில்லை எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.