கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து சூர்யா மீண்டு இருந்தாலும் அதன் அச்சத்தில் இருந்து இன்னும் மீளவில்லை.

Suriya Decision on Suriya40 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 40 என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரானாவின் இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது வெள்ளித்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப் பட்டுள்ள நிலையில் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்புகள் புதுக்கோட்டையில் தொடங்கி இருந்தன. கொரானாவிலிருந்து மீண்டு வந்து இருந்தாலும் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என சூர்யா யோசித்ததன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையிலேயே நடத்த படக்குழு முடிவு எடுத்துள்ளது.

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் : காவல் ஆணையர் உத்தரவு

ஜூலை இரண்டாவது வாரத்தில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறும் என தகவல் கிடைத்துள்ளது.

சங்கீதா அக்கா Life Time Support – புகைப்படத்தை பகிர்ந்த Atlee மனைவி Priya..! | Ask Me | Social Media