எதற்கும் துணிந்தவன் படம் பார்த்துவிட்டு நடிகர் சூர்யாவின் மகனும் மகளும் என்ன சொல்லி இருக்காங்க என்பதை பார்க்கலாம்.

Suriya Daughter About Etharkum Thuninthavan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படத்தைப் பலரும் பாராட்டி வர பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் சூர்யா அளித்த பேட்டி ஒன்றில் படம் பார்த்துவிட்டு உங்களது மகள் மற்றும் மகன் என்ன சொன்னார்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு சூர்யா என்னுடைய மகள் படத்தைப் பார்த்துவிட்டு படம்பிடித்து இருப்பதாகவும் என்னுடைய ரோல் நன்றாக இருந்தது எனவும் கூறினார். ஜெய் பீம், சூரரைப்போற்று படங்களை தொடர்ந்து இந்த படமும் ஃபேவரைட் படம் என கூறினார்.

என்னுடைய மகன் உங்களிடம் இருந்து இப்படி ஒரு அவதாரத்தை எதிர்பார்க்கவில்லை படம் நன்றாக இருப்பதாக கூறியதாக தெரிவித்துள்ளார். படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக சூர்யா தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.