மீண்டும் சூப்பர் ஹிட் கூட்டணி அமைய உள்ளது.
Suriya Combo With Gnanavel : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஜெய்பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதன்பிறகு மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக இவர்களது கூட்டணியில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனால் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.