Suriya Bold Decision :
இனி ஸ்டுடியோ கிரீன், 2டி என்டர்டெயின்மெண்ட், ட்ரீம் வாரியர்ஸ் என தன் சொந்த பேனர்களில் படம் நடிக்கக்கூடாது என சூர்யா முடிவு செய்துள்ளாராம்.
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
தளபதி 63 குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு – அதிர்ந்து போன டிவிட்டர்!
இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
குறிப்பாக பலரும் இப்படம் புரியவில்லை என்றும் இதன் கதாப்பாத்திரங்களில் தெளிவு இல்லை என்றும் கூறியிருந்தனர். எப்படி இருந்தாலும் சூர்யாவுக்கு இப்படம் கசப்பான அனுபவமாகவே அமைந்துள்ளது.
இதையடுத்து இனி ஸ்டுடியோ கிரீன், 2டி என்டர்டெயின்மெண்ட், ட்ரீம் வாரியர்ஸ் என தன் சொந்த பேனர்களில் படம் நடிக்கக்கூடாது என சூர்யா முடிவு செய்துள்ளாராம்.
அடுத்து வெளிவரும் சூர்யாவின் காப்பான் படமும் லைக்கா நிறுவனத்தின் படம் என்பது குறிப்பிடத்தக்கது.