நடிகர் சூர்யா தற்போது நடிக்க இருக்கும் சூர்யா 42 திரைப்படத்தில் கமல் மற்றும் விக்ரமை போல பல கெட்டப்புகளில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய திரை உலகில் மாஸ் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சூர்யா. இவர் தற்பொழுது வணங்கான், வாடிவாசல் போன்ற படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க இருக்கும் “சூர்யா 42” என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தற்பொழுது சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்க உள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்க, ஆனந்த்ராஜ், கோவை சரளா, கிங்ஸ்லி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. தற்பொழுது படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் சூர்யா 42 திரைப்படம் 10 மொழிகளில் 3d இல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து அண்மையில் இப்படத்திற்கான மிரட்டலான மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது.

அப்போஸ்டர் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்பொழுது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் சூர்யா, கமல் மற்றும் விக்ரமா போல சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் ஆகிய 5 ஐந்து கேரக்டர்களிலும் சூர்யாவே நடிக்க இருக்கிறார் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்து வருகிறது.