நடிகர் சூர்யா சூரரைப்போற்று படத்தைப் பற்றிய சூப்பரான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
Suriya About Soorarai Potru : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்துள்ளார்.
மாஸ்டர் படத்துடன் மோத இருந்த இப்படமும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் தள்ளிப்போனது.
சூர்யாவின் ரசிகர்கள் தற்போது இப்படத்திற்காக மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தைப் பற்றிய அப்டேட் ஆவது வெளியாகாதா என அவர்கள் எண்ணி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப் படத்தின் புரமோஷனுக்காக ஜோதிகாவும் சூர்யாவும் பேட்டி ஒன்றை அளித்தனர்.
அந்தப் பேட்டியில் சூர்யாவிடம் சூரரைப்போற்று படத்தைப் பற்றி கேட்டதற்கு கூடிய விரைவில் இரண்டு புதிய பாடல்கள் ரிலீசாகும் என கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
லைவ் வீடியோவில் சூர்யா கூறிய இந்த காணொளி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஷாக் செய்து கொண்டாடி வருகின்றனர்.
இந்த படம் மட்டும் ரிலீஸாகட்டும் கொண்டாடுவீங்க.. – கர்ணன் படம் பற்றி பேசிய பிரபல நடிகர்!
மேலும் சூர்யா இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் அருவா படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
• Two more New Songs From #SooraraiPottru Will Be released soon! It has come very well.. This Film is again really close to my heart. We are looking forward for it! – @Suriya_offl ❤️ #PonmagalVandhalOnPrime From May29 #Suriya pic.twitter.com/qAjO4Bya19
— Suriya Fans Club (@SuriyaFansClub) May 28, 2020