Suriya About Kerala Flight Crash : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் உருவாகியுள்ளது இப்படத்தை இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
இந்த படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் பாண்டிராஜ் இயக்கத்தில் கிராமத்து கதை மற்றும் ஹரி இயக்கத்தில் அருவா ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.
சமீப நாட்களாக மீரா மிதுன் நடிகர் சூர்யாவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். சூர்யாவை மட்டுமல்லாமல் ஜோதிகாவின் கேரக்டரைப் பற்றி கண்டபடி பேசி வருகிறார்.
இதனால் மீராவுக்கும் சூர்யாவின் ரசிகர்களுக்கும் இடையே ட்விட்டரில் பெரும் போர் நடந்து வருகிறது. இந்த சர்ச்சைகளுக்கு நடுவே சூர்யா பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதாவது கேரளாவில் நடந்த விமான விபத்து குறித்து அவர் உருக்கத்துடன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைந்து வரும் அவர் பிரார்த்தனை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.