மீண்டும் மாநாடு படத்தின் படபிடிப்பு பாதியில் நின்றது பற்றி மீம் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார் தயாரிப்பாளர்.
Suresh Kamatchi Explain About Maanaadu : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு, இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.
எஸ்.ஜே சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பாரதி ராஜா, மனோஜ், உதயா, கல்யாணி ப்ரியதர்ஷன் என எக்கச்சக்கமான பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
போட்றா வெடியை மாஸ்டரில் விஜய் பெயர் இது தான்.. புகைப்படத்துடன் கசிந்த தகவல் – இதோ பாருங்க.!
இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் கொரானா பாதிப்பால் தாற்காலிகமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து சுரேஷ் காமாட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரணோவுக்கா இடம் கொடுப்போம்? இந்த Back up இல் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் #STR தான். மீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள் “மாநாடு” என்று பதிவிட்டுள்ளார்.
கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரணோவுக்கா இடம் கொடுப்போம்?
இந்த Back up இல் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் #STR தான்.மீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள் “மாநாடு” pic.twitter.com/RFKhqva4QO
— sureshkamatchi (@sureshkamatchi) March 16, 2020