குடியுரிமை சட்ட போராட்டம் குறித்து ரஜினிகாந்த் போட்ட டீவீட்டிற்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது.
மத்திய மாநில அரசுகள் குடியுரிமை சட்டம் என புது சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிரியாக பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
கமல்ஹாசன் உட்பட எதிர் கட்சிகள் அனைத்தும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்வீட் ஒன்றின் மூலமாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடாது, தேச பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை கருத்தில் கொண்டு மக்கள் ஒற்றுமையுடன் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.
இப்பொது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு வேதனை அளிக்கின்றன என கூறியுள்ளார். ரஜினிகாந்திற்கு இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவித்து #IStandWithRajinikanth என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்கின்றனர்.
அதே போல் ரஜினியின் கருத்து எதிர்ப்பு தெரிவித்து போராடுவது வன்முறையா? என்ற கேள்வியுடன் #ShameOnYouSanghiRajini என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்,
— Rajinikanth (@rajinikanth) December 19, 2019