தெலுங்கு சினிமாவுக்கு பேரிழப்பு என மகேஷ்பாபுவின் தந்தை மரணத்திற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் மகேஷ்பாபுவின் தந்தையும் நடிகருமான கிருஷ்ணா. இவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில்
தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மகேஷ் பாபுவின் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமீபத்தில் மகேஷ் பாபுவின் தாயார் மரணமடைந்த சம்பவம் அவரது குடும்பத்துக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அதிலிருந்து மீள்வதற்குள் அவருடைய தந்தை மரணம் அடைந்தது அவரது குடும்பத்தை மட்டுமல்லாமல் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் கிருஷ்ணாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் தெலுகு சினிமாவிற்கு இவரது மறைவு பேரிழப்பு என தெரிவித்துள்ளார். மேலும் மகேஷ் பாபுவிற்கு ஆறுதல் கூறி ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதேபோல் பல திரையுலகப் பிரபலங்கள் மகேஷ் பாபுவின் தந்தையாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.