Super Singer Rajalaxmi Controversy

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Super Singer Rajalaxmi Controversy : தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வருபவர் ராஜலட்சுமி. இவர் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலமாக தான் மக்கள் மத்தியில் பரிச்சயமானார்.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பல்வேறு பாடல்களை பாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இவர் நிகழ்ச்சி ஒன்றில் மாம்மான்னு கூப்பிட தான் மனசு சொல்லுது என்கிற பாடலை தன்னுடைய தங்கை கலைவாணி எழுதி பாடியதாக கூறியுள்ளார்.

இந்த பாடலுக்கு சொந்தக்காரியான மதுர மல்லி என்பவர் ராஜலட்சுமி செய்தது மிகவும் கீழ்த்தரமான செயல். என்னுடைய பாட்டுக்கு வேறு யாரையோ சொந்தக்காரி எனக் கூறுவது மன உளைச்சலைத் தருகிறது.

ராஜலட்சுமி பேசிய பேச்சை வாபஸ் பெறவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மனம் நொந்து பேசியுள்ளார்.