சிம்பு ஒரு குழந்தை மாதிரி என கூறி வெங்கட் பிரபுவை வெறுப்பேற்றியுள்ளார் பிரபல இயக்குனரான சுந்தர் சி.
Sundar C Comment About Simbu : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக சர்ச்சைக்கு பஞ்சமில்லாதவராக வலம் வருபவர் சிம்பு, இவரது நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாக இருந்தது.
வெங்கட் பிரபு இயக்க இருந்த இந்த திரைப்படம் மூன்று முறை தொடங்கி படப்பிடிப்புகள் நடைபெறாமலேயே ட்ராப்பானது.
அஜித்தின் தைரியம் யாருக்கு வரும்? – பிரபல தொகுப்பாளியின் பட்டய கிளப்பும் ட்வீட்.!
இதனால் வெங்கட் பிரபு தன்னுடைய ஒரு வருட உழைப்பு வீணாகி விட்டது என வருத்தத்தில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சிம்புவை வைத்து வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்தை இயக்கிய சுந்தர் சி சிம்பு ஒரு குழந்தை மாதிரி, ஒரு குழந்தை கிட்ட அன்பா சொன்னா அது சொல்ற வேலையை செய்து முடித்து விடும். அதுவே ஒரு குச்சியை வச்சிட்டு சொன்னா அது வேலைய தான் காட்டும் என கூறியுள்ளார்.
நம்பி மோசம் போன சிம்பு.. இவ்வளவு சர்ச்சைக்கும் இந்த இருவர் தான் காரணம் – வெளியான அதிர்ச்சி தகவல்.!
சுந்தர் சி இவ்வாறு கூறியது வெங்கட் பிரபு உட்பட சிம்பு மீது குறை சொல்லி வரும் இயக்குனர்களை தயாரிப்பாளர்களையும் குத்தி காட்டுவது போல இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.