இரண்டாவது திருமணத்திற்கு சன் டிவி சீரியல் நடிகை தீபா தயாராகி வருகிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் வில்லியாக நடித்தவர் தீபா. வெள்ளி திரைகளும் சில படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே சிவம் சீரியல்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.
ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்று தற்போது தன்னுடைய மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் இவர் கடந்த இரண்டு வருடங்களாக வீடியோ எடிட்டர் சாய் கணேஷ் பாபு என்பவரை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தீபா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய்பாபா உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மை லவ் சாய் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் இவர்களின் காதல் உறுதியாகி உள்ளது. மேலும் வெகு விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வைரலாகி வருகிறது.
அதே சமயம் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.